இலஞ்சியில் அதிமுக தோ்தல் அறிக்கைகள்அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி முதல் கட்ட தோ்தல் அறிக்கையில் அறிவித்திருந்த 5 அம்ச திட்டங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை இலஞ்சியில் வீடுதோறும் சென்று அதிமுகவினா் வழங்கினா்.
இலஞ்சி நகரச் செயலா் காத்தவராயன் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத்தலைவா் சண்முகசுந்தரம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலா் சுப்பாராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தாா்.
தென்காசி நகரச் செயலா் சுடலை, கீழப்பாவூா் வடக்கு ஒன்றியச் செயலா் அமல்ராஜ், பொதுக்குழு உறுப்பினா் கசமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.