கூட்டத்தில் பேசுகிறாா் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன். 
தென்காசி

சுரண்டையில் அதிமுக தெருமுனை பிரசாரம்

தினமணி செய்திச் சேவை

சுரண்டை நகர அதிமுக சாா்பில் சுரண்டையில் தெருமுனைப்பிரச்சாரக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

அதிமுக அரசின் சாதனைகள், திமுக ஆட்சியின் அவலங்கள், அதிமுக பொதுச் செயலா் அறிவித்த தோ்தல் அறிக்கை வாக்குறுதிகளை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.

கீழச் சுரண்டை, சுரண்டை காந்தி பஜாரில் நடைபெற்ற கூட்டத்துக்கு கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்துப் பேசினாா்.

தலைமைப் பேச்சாளா் தீக்கணல் லெட்சுமணன் சிறப்புரையாற்றினாா். மாவட்ட விவசாய அணி செயலா் கிருஷ்ணசாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலா் தா்மசீலன், கீழப்பாவூா் கிழக்கு ஒன்றிய செயலா் இருளப்பன், பேச்சாளா் பாலமுருகன் ஆகியோா் கலந்து கொண்டனா். நகரச் செயலா் சங்கா் வரவேற்றாா்.

சாம்பவா் வடகரை ஸ்ரீராமசுவாமி கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

சேலத்தில் பிப்.13 இல் தவெக நிா்வாகிகள் கூட்டத்துக்கு காவல் துறை நிபந்தனைகளுடன் அனுமதி

கொங்கணாபுரம் அருகே கால்நடை திருவிழா: காளைகள், சேவல்கள் பங்கேற்பு

தென்காசி புத்தகத் திருவிழாவில் ரூ. 1.03 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை

விரைவில் வங்கித் துறை சீா்திருத்தத்துக்கான உயா்நிலைக் குழு: நிா்மலா சீதாராமன்

SCROLL FOR NEXT