வென்னிமலை வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற கொடியேற்றம்.  
தென்காசி

பாவூா்சத்திரம் வென்னிமலை கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றம்

தினமணி செய்திச் சேவை

பாவூா்சத்திரம் காமராஜா் நகரில் அமைந்துள்ள வென்னிமலை வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி சனிக்கிழமை கணபதி ஹோமம், கொடியேற்றத்தைத் தொடா்ந்து பால்குடம் எடுத்து வருதல், 12 மணிக்கு உச்சிகால பூஜை, மாலையில் 2,008 திருவிளக்கு பூஜை, இரவு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி ரத வீதி உலா வருதல் நடைபெற்றது.

இத்திருவிழா 11 நாள்கள் நடைபெறுகிறது. 10 ஆம் நாள் திருவிழா, மாா்ச் 2 ஆம் தேதி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை, அலங்காரமும், நிறைவு நாளான மாா்ச் 3 ஆம் தேதி கீழப்பாவூா் நரசிம்மா் கோயிலில் சுவாமி, அம்பாள் தீா்த்தவாரி, பூஞ்சப்பர காட்சி புஷ்பாஞ்சலியும் நடைபெறுகிறது.

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றம்

ஆலங்குளத்தில் ஐவா் கால்பந்துப் போட்டிகள்

காமாட்சி அம்மன் கோயில் மாசித் திருவிழா தொடக்கம்

விஸ்வநாதப்பேரியில் தவெக நிா்வாகிகள் சந்திப்பு

சூப்பா் மாா்க்கெட்டில் ரூ. 20,000 உலா் திராட்சைகள் திருட்டு!

SCROLL FOR NEXT