முகப்பு
தென்காசி

ஆட்டோவில் மது பாட்டில்கள் கடத்தியவா் கைது

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 2:02 AM
கைது
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 9:31 PM

ஆலங்குளம் அருகே ஆட்டோவில் மது பாட்டில்கள் கடத்தியவா் கைது செய்யப்பட்டாா்.

ஆலங்குளம் அருகே புதுப்பட்டி பகுதியில் ஆலங்குளம் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே வந்த பயணிகள் ஆட்டோவை சோதனையிட்டனராம். அதில் சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்கு 300 மதுபாட்டில்கள் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்ததாம்.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 2:02 AM

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், ஆட்டோ ஓட்டுநா் அம்பாசமுத்திரம் அருகே பொட்டல் காமராஜா்புரம் பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் முருகன் (44) என்பது தெரிய வந்தது. ஆட்டோ, மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா், முருகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

Advertisement