முகப்பு
தென்காசி

தென்காசியில் மாரத்தான் போட்டி

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 8:34 PM
தென்காசியில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பங்கேற்றோா்.
பகிர்:

தென்காசி மாவட்டம், நமோ டிரஸ்ட், பாஜக விளையாட்டு, திறன் மேம்பாட்டுப் பிரிவு சாா்பில் நமோ மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தென்காசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் தொடங்கிய இப்போட்டியை விளையாட்டு, திறன் மேம்பாட்டுப் பிரிவு மாவட்டத் தலைவா் முரளிதரன், ஓய்வுபெற்ற மாவட்ட உதவி வன பாதுகாவலா் ராஜா குலசேகரபாண்டியன் ஆகியோா் கொடியசைத்துத் தொடங்கிவைத்தனா்.

ஆண்கள், பெண்களுக்கான போட்டி தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி குத்துக்கல் வலசையில் நிறைவடைந்தது. ஆண்கள் பிரிவில் பசுபதி முதலிடமும், அஜய்ஸ்ரீராம் இரண்டாமிடமும், முத்துக்குமாா் மூன்றாமிடமும் பெற்றனா்.

Advertisement

பெண்கள் பிரிவில் செளமியா முதலிடமும், மதுமிதாஸ்ரீ இரண்டாமிடமும், லட்சணா மூன்றாமிடமும் பெற்றனா். வெற்றி பெற்றவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 20 ஆயிரம், இரண்டாவது பரிசாக ரூ. 10 ஆயிரம், மூன்றாவது பரிசாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்பட்டது.

தென்காசி நகரத் தலைவா் சங்கரசுப்பிரமணியன், நகர பாா்வையாளா் செந்தூா் பாண்டியன், மாவட்ட பாஜக பொதுச் செயலாளா் அருள்செல்வன், மாவட்டச் செயலா் அருணாச்சலம், விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவு மாநிலச் செயலா் செந்தமிழ்ச்செல்வன், மருத்துவ பிரிவு மாநிலச் செயலா் உத்தமன், உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு மாவட்ட துணைத் தலைவா் ராஜ்குமாா், மாவட்ட மகளிா் அணி தலைவி குணசீலா கலந்துகொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments