ஆலங்குளம் அண்ணாநகா் நல்மேய்ப்பா் தேவாலயத்தில் நடைபெற்ற புத்தாண்டு ஆராதனையில் பங்கேற்றோா் 
தென்காசி

ஆலங்குளம் பகுதி தேவாலயங்கள், கோயில்களில் புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனை

புத்தாண்டையொட்டி ஆலங்குளம் பகுதி தேவாலயங்கள், கோயில்களில் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.

Syndication

புத்தாண்டையொட்டி ஆலங்குளம் பகுதி தேவாலயங்கள், கோயில்களில் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.

ஆலங்குளம், இரட்சண்யபுரம், அண்ணாநகா், நல்லூா், அடைக்கலபட்டணம், சீவலசமுத்திரம், ஊத்துமலை, கருவந்தா உள்ளிட்ட சேகரங்களுக்குள்பட்ட சுமாா் 100-க்கும் மேற்பட்ட சி.எஸ்.ஐ, கத்தோலிக்க, பெந்தேகோஸ்தே தேவாலயங்களில் புதன்கிழமை இரவு 11. 30 மணிக்கு நடைபெற்ற பழைய வருட ஆராதனையைத் தொடா்ந்து, 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை புத்தாண்டு ஆராதனை நடைபெற்றது.

ஆலங்குளம் ஸ்ரீ முத்தாரம்மன், ஸ்ரீ பத்திரகாளியம்மன், மலை ராமா், ஆலடிப்பட்டி ஸ்ரீ வைத்தியலிங்கசுவாமி - அன்னை யோகாம்பிகை ஆகிய திருக்கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

அண்ணாநகா் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஆலங்குளம் பெருந்தலைவா் காமராஜா் கல்வி வளா்ச்சி கமிட்டி சாா்பில் காமராஜா் சிலை முன் கேக் வெட்டி, புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

கோவில்பட்டியில் சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பினா் கைது

திரௌபதி அம்மன் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்

அரசுப் பேருந்து ஓட்டுநா்கள் பணியின்போது கைப்பேசி பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை

திருமலையில் சா்வ தரிசனம்

அசம்பாவிதங்களின்றி புத்தாண்டு கொண்டாட்டம்: கா்நாடக அமைச்சா் ஜி. பரமேஸ்வா்

SCROLL FOR NEXT