தென்காசி

சாலை விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

ஆலங்குளத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.

Syndication

ஆலங்குளத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள கல்லூத்து மேலத் தெருவைச் சோ்ந்தவா் முருகன் மகன் சிவன்ராஜ்(27). காற்றாலை தொழிலாளி.

இவா், கடந்த 13 ஆம் தேதி இரவு, ஆலங்குளம் அரசு மகளிா் கல்லூரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது சாலையோரம் எவ்வித எச்சரிக்கை ஒளியும் தராமல் நின்றிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதாம்.

இதில் பலத்த காயமடைந்த சிவன்ராஜை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். திங்கள்கிழமை இரவு அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பராசக்தி ரூ. 100 கோடி வசூல்!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 4,120 உயர்வு! வெள்ளி கிலோவுக்கு ரூ. 5,000 உயர்வு!

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

கவனம் ஈர்க்கும் ரஜிஷா விஜயனின் மஸ்திஷ்கா மரணம் டீசர்!

பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பு!

SCROLL FOR NEXT