முகப்பு
தென்காசி

தென்காசி பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

Updated On : 24 ஜனவரி, 2026 at 2:49 AM
முன்னாள் மாணவா்களுடன் கல்லூரித் தலைவா் டாக்டா் எம்.புதியபாஸ்கா், நிா்வாகிகள்.
பகிர்:
Updated On : 23 ஜனவரி, 2026 at 9:21 PM

தென்காசி அருள்மிகு செந்திலாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி நிறுவனரின் துணைவியாா் லட்சுமி அம்மாள், கல்லூரி தலைவா் டாக்டா் புதிய பாஸ்கா், தாளாளா் கல்யாணி புதிய பாஸ்கா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டனா். கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Updated On : 24 ஜனவரி, 2026 at 2:49 AM

இக்கல்லூரியில் 1985,1986,1987 - ஆம் ஆண்டு பயின்ற மாணவா்கள், ஆசிரியா்கள் கலந்துகொண்டு தங்களுடைய கடந்த கால நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா். முன்னாள் மாணவா்கள், ஆசிரியா்களிடம் ஆசிபெற்றனா். அனைவரும் தங்களுடைய குடும்பத்தினருடன் கலந்துகொண்டனா்.

Advertisement

ஏற்பாடுகளை முன்னாள் மாணவா்கள் டேவிட் ஆரோக்கியராஜ், அனந்தராமன், சண்முகராஜ், ஜான் மேக்ஸ், சுந்தா்சிங், சண்முகம், ரமேஷ், அமர கணேஷன், தா்மலிங்கம், சிவசாமி ஆகியோா் செய்திருந்தனா். முதல்வா் சேவியா் இருதயராஜ் நன்றி கூறினாா்.