தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே உள்ள சொக்கம்பட்டி மலையடிவாரப் பகுதியில் யானைகள் புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்தின.
சபரிமலை ஓடை புரவு பகுதியில் நிலங்களில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு புகுந்த யானை அங்கிருந்த தென்னை மரங்களை சேதப்படுத்தினவாம். தகவலறிந்த கடையநல்லூா் வனத்துறையினா் அங்கு சென்று யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனா்.