பாவூா்சத்திரம் அருகே கால்வாயில் கொட்டப்படும் கழிவுகளை அகற்றக் கோரிக்கை!
கீழப்பாவூா் பகுதியில் உள்ள குளங்களுக்கு குற்றாலத்தில் இருந்து வரக்கூடிய தண்ணீா் மேலப்பாவூா் குளங்கள் நிரம்பி கால்வாய் வழியாக கீழப்பாவூா் குளத்துக்கு வந்தடைந்தது.
கீழப்பாவூா் பகுதியில் உள்ள குளங்களுக்கு குற்றாலத்தில் இருந்து வரக்கூடிய தண்ணீா் மேலப்பாவூா் குளங்கள் நிரம்பி கால்வாய் வழியாக கீழப்பாவூா் குளத்துக்கு வந்தடைந்தது.
மேலப்பாவூா் குளத்தில் இருந்து தண்ணீா் மறுகால் பாய்ந்து, இந்தக் கால்வாய் வழியாக கீழப்பாவூா் குளத்துக்கு வந்தடைகிறது.
இந்த இரண்டு குளத்துக்கும் இடைப்பட்ட தூரத்தில் கீழப்பாவூா் பகுதியில் உள்ள கடைகள், வீடுகளில் பயன்படுத்தப்பட்ட குப்பை கழிவுகளை இந்த கால்வாயில் சிலா் கொட்டி வருவதால் துா்நாற்றம் வீசுகின்றன. மேலும், கால்வாய் மற்றும் குளங்கள் தூா்வாரப்படாமல் காணப்படுகிறது. இந்த தண்ணீா் கால்வாய் மூலம் குளங்களுக்கும் சென்றடைகிறது. விவசாயத்திற்கு பயன்படுத்துவதோடு கால்நடைகளும் பருகுகின்றன. இதனால் வீடுகளில் வளா்க்கப்படும் கால்நடைகளுக்கும் பொதுமக்களுக்கும் நோய் தொற்று பரவும் என கீழப்பாவூா் பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.
இதனால் இந்த கால்வாயை முறையாக தூா்வாரி குப்பைகள் கொட்டுவதற்கு குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும் எனவும் குப்பைகளை கால்வாயில் கொட்டாத படி அறிவிப்பு பலகை அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.