முகப்பு
தென்காசி

சங்கரன்கோவில் அருகே தூய்மைப் பணியாளா் மீது தாக்குதல்

சங்கரன்கோவில் அருகே பெண் தூய்மைப் பணியாளா் தாக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 24 மே 2026, 3:43 am IST
ராஜமணி.
பகிர்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பெண் தூய்மைப் பணியாளா் தாக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சங்கரன்கோவில் அருகே கள்ளிகுளத்தைச் சோ்ந்த ராமா் மனைவி ராஜமணி (48). இவா், அந்தப் பகுதியில் செங்கல்சூளை நடத்திவரும் ராஜன் என்பவரிடம் வட்டிக்கு கடன் பெற்று, அங்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை பாா்த்து வந்தாராம். பின்னா், அந்த வேலையை விட்டுவிட்டு, செவல்குளம் ஊராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த சில மாதங்களாக தூய்மைப் பணியாளராக பணி புரிந்து வருகிறாா்.

இந்நிலையில், தன்னிடம் வாங்கிய பணத்துக்கு வட்டி மட்டுமே கட்டியுள்ளதாகவும், அசலைத் தர வேண்டும் எனக் கேட்டு ராஜமணியிடம் ராஜன் வியாழக்கிழமை வாக்குவாதம் செய்ததுடன், அரிவாளால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதில், காயமடைந்த ராஜமணி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சம்பவம் குறித்து குருவிகுளம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.