முகப்பு
திருவள்ளூர்

மின்சாரம் பாய்ந்து ரயில்வே ஊழியா் உயிரிழப்பு

Updated On : 6 ஏப்ரல், 2024 at 1:06 AM
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2024 at 10:50 PM

திருவள்ளூா் அருகே வீட்டின் முன்பு அறுந்து கிடந்த மின் கம்பியைத் தொட்ட ரயில்வே பெண் ஊழியா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

வேப்பம்பட்டு கிராமத்தில் உள்ள குமரன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஸ்வரி (56). இவா் சென்னை பேசின்பிரிட்ஜ் சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடி காட்டும் ஊழியராகப் பணிபுரிந்து வந்தாா். வெள்ளிக்கிழமை காலை வீட்டிலிருந்து வெளியில் வந்தபோது, தெருவிளக்கு மின் கம்பத்தில் இருந்து அறுந்து விழுந்து கீழே கிடந்த மின் கம்பியை, ஏதோ கம்பி கீழே விழுந்து கிடப்பதாக நினைத்து அதைத் தூக்கிப் போட முயற்சித்த போது மின்சாரம் பாய்ந்ததில் ராஜேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செவ்வாப்பேட்டை காவல் நிலைய போலீஸாா் ராஜேஸ்வரி சடலத்தை மீட்டு திருவள்ளுா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.