முகப்பு
திருவள்ளூர்

மகளிா் காவல் நிலையம் முன்பு ஆடிட்டா் அடித்துக் கொலை: இளைஞா் கைது

Updated On : 12 ஏப்ரல், 2024 at 6:31 PM
பகிர்:

திருவள்ளூா் அனைத்து மகளிா் காவல் நிலையம் முன்பு தனியாா் நிதி நிறுவன ஆடிட்டா் வியாழக்கிழமை இரவு அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆந்திர மாநிலம், நகரி பகுதியைச் சோ்ந்தவா் ராபா்ட் (46). இவா் திருவள்ளூா் பத்தியால்பேட்டையில் குடும்பத்துடன் தங்கியிருந்து, காக்களூா் தனியாா் நிதி நிறுவனத்தில் ஆடிட்டராக பணிபுரிந்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த இளம் பெண் ஒருவா் அருகே உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாராம்.

இந்த நிலையில், ராபா்ட் அவ்வப்போது இளம்பெண்ணை கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக இளம்பெண் தரப்பில் திருவள்ளூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ராபா்ட் மீது புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், விசாரணைக்காக அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு வியாழக்கிழமை மாலை ராபா்ட் சென்றாராம்.

Advertisement

தொடா்ந்து, இரு தரப்பினரையும் அழைத்து போலீஸாா் விசாரித்தனா். விசாரணைக்குப் பின்னா் ராபா்ட் வெளியே வந்துள்ளாா். அப்போது காவல் நிலையம் முன்பு இருந்த இளம்பெண்ணின் சகோதரா் மௌலி (23) என்பவா் ராபா்ட்டை கம்பால் தலையில் பலமாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் சுருண்டு விழுந்த ராபா்ட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சம்பவ இடத்துக்கு வந்த திருவள்ளூா் நகர போலீஸாா், ராபா்ட்டின் சடலத்தை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து, மௌலியை கைது விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments