முகப்பு
திருவள்ளூர்

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

Updated On : 20 ஏப்ரல், 2024 at 4:07 PM
பகிர்:

வடசென்னை அனல்மின் நிலையத்தில் சனிக்கிழமை 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டம் அத்திப்பட்டு பகுதியில் வடசென்னை அனல் மின் நிலையம் உள்ளது. இங்குள்ள முதல் யூனிட்டில் மூன்று அலகுகளின் தலா 210 வீதம் 630 மெகாவாட் மின்சாரமும், இரண்டாவது யூனிட்டில் இரண்டு அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், இரண்டாவது யூனிட்டில் உள்ள இரண்டாவது அலகில் உள்ள கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் மின் வாரிய ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments