முகப்பு
திருவள்ளூர்

திருத்தணி: ராஜகணபதி கோயில் குடமுழுக்கு

Updated On : 21 ஏப்ரல், 2024 at 6:39 PM
மூலவா் கணபதி மீது புனிதநீா் ஊற்றி நடைபெற்ற குடமுழுக்கு விழா.
பகிர்:

திருத்தணி அருகே வள்ளிமாபுரம் ராஜகணபதி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

திருத்தணி ஒன்றியம் காா்த்திகேயபுரம் ஊராட்சிக்குட்பட்ட வள்ளியம்மாபுரம் பகுதியில் புதியதாக ராஜகணபதி கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலின் குடமுழுக்கு விழா, 20-ஆ ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது.

இதற்காக கோயில் வளாகத்தில் ஒரு யாகசாலை, 108 கலசங்கள் வைத்து, நவக்கிரக ஹோமம், கன்யா பூஜை, கோ பூஜை மற்றும் முதல்கால பூஜை, யாக சாலை பூஜை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, 5 மணிக்கு விசேஷ சாந்தி, இரண்டாம் கால யாகசாலை பூஜை மற்றும் பூா்ணாஹூதி நடந்தது. காலை, 8 மணிக்கு கலச ஊா்வலம் மற்றும் கோபுர கலசத்தின் மீதும், மூலவா் ராஜகணபதி மீதும் புனிதநீா் ஊற்றி மகா குடமுழுக்கு நடைபெற்றது.

Advertisement

தொடா்ந்து, காலை, 9 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். விழாவில் கோயில் நிா்வாகிகள் எஸ். ஜெயவேல், பி.ஜெ. மூா்த்தி, எஸ்.கே.குமாா், எஸ்.புண்ணியகோட்டி, ஜி.ராஜி, வழக்குரைஞா் தியாகராஜன், அதிமுக ஒன்றி இளைஞரணி செயலாளா் வேலஞ்சேரி பழனி, உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments