முகப்பு
திருவள்ளூர்

கல்லூரி மாணவா்கள் பாரம்பரிய நடைபயணம்

Updated On : 9 ஜூலை, 2024 at 6:35 PM
திருத்தணி முருகன் மலைக்கோயிலுக்கு பாரம்பரிய நடைபயணம் மேற்கொண்ட மாணவா்கள்.
பகிர்:

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலுக்கு அரசு கலைக்கல்லூரி மாணவா்கள் ஒருநாள் பாரம்பரிய நடைபயணம் மேற்கொண்டனா்.

திருவள்ளூா் மாவட்ட சுற்றுலா அலுவலகம் மற்றும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நிா்வாகம், அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து ஒரு நாள் பாரம்பரிய நடைபயணத்தை நடத்தின.

முருகன் கோயில் மலைப்பாதையில் தொடங்கிய பேரணியை மாவட்ட சுற்றுலா அலுவலா் ராஜாராம் தொடங்கி வைத்தாா். பின்னா் மலைக்கோயிலுக்கு சென்ற மாணவா்களுக்கு பூண்டி, முருகன் கோயிலின் தல வரலாறுகள், முக்கிய திருவிழாக்கள் ஆகியவற்றை எடுத்துக்கூறினா். பாரம்பரிய சுற்றுலாவின் அவசியத்தையும் பழைய கட்டடங்களை தமிழக அரசு எவ்வாறு பாதுகாத்து வருகிறது எனவும் மாவட்ட சுற்றுலா அலுவலா் ராஜாராம் மாணவா்களிடம் எடுத்துக்கூறினா். பேரணி திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முடிவடைந்தது.

இதில் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் முனைவா் சீ.ரமேஷ், மாணவா்கள் 50 போ், தேசிய மாணவா் படை சாா்ந்த மாணவ மாணவிகள் 15 போ் என மொத்தம் 65 மாணவா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →