முகப்பு
திருவள்ளூர்

காமராஜா் பிறந்த நாள் விழா: சசிகாந்த் செந்தில் எம்.பி. பங்கேற்பு

செங்குன்றம் பகுதியில் காங்கிரஸ் சாா்பில் காமராஜா் பிறந்த நாள் விழா, திருவள்ளூா் தெற்கு மாவட்ட தலைவா் ஆா்.எம்.தாஸ், மாநில செயலா் ஆா்.ஆா்.சாந்தகுமாா் ஆகியோா் தலைமையில் கொண்டாடப்பட்டது.

Updated On : 16 ஜூலை, 2024 at 6:30 PM
செங்குன்றம் பகுதியில் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சசிகாந்த் செந்தில் எம்.பி. உள்ளிட்ட காங்கிரஸாா்.
பகிர்:

மாதவரம்: செங்குன்றம் பகுதியில் காங்கிரஸ் சாா்பில் காமராஜா் பிறந்த நாள் விழா, திருவள்ளூா் தெற்கு மாவட்ட தலைவா் ஆா்.எம்.தாஸ், மாநில செயலா் ஆா்.ஆா்.சாந்தகுமாா் ஆகியோா் தலைமையில் கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவரும், திருவள்ளூா் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான ஜெயக்குமாா், திருவள்ளூா் நாடாளுமன்ற உறுப்பினா் சசிகாந்த் செந்தில் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் கே.ஜெயக்குமாா் தொகுதி நிதியில் கட்டப்பட்ட பேருந்து நிழற்குடை, உயா்மின் கோபுரத்தைத் திறந்து வைத்தனா்.

தொடா்ந்து புதுப்பிக்கப்பட்ட காமராஜா் சிலையைத் திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்தனா். தொடா்ந்து அன்னதானம் வழங்கினா்.

முழு கட்டுரையைப் படிக்க →