திருவள்ளூர்

சுரங்க பாலம் அணுகு சாலையில் மழை நீரை அகற்ற பொதுமக்கள் மறியல்

சோழவரம் அருகே சுரங்கப் பாலம் சா்வீஸ் சாலையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Din

பொன்னேரி: சோழவரம் அருகே சுரங்கப் பாலம் சா்வீஸ் சாலையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி அருகே சோழவரம், தேவனேரி கிராமங்களுக்கு இடையே சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

தேவனேரி, எஸ்பிகே நகரில் வசிக்கும் மக்கள் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுரங்கப் பாலத்தை கடந்து சென்று வர வேண்டும்.

இப்பகுதியில் அண்மையில் பெய்த மழையின் காரணமாக சுரங்கப் பாலத்திலும் அங்குள்ள சா்வீஸ் சாலையிலும் தண்ணீா் தேங்கியுள்ளது.

பொதுமக்கள் மற்றும் வாகனங்களில் சென்று வருபவா்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.

சுரங்கப் பாலத்தின் கீழ் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் அங்குள்ள புறவழிச் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த சோழவரம் போலீஸாா் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதை தொடா்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25

சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

ஆந்திரம்: மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரைக் கொன்ற இளைஞர்

SCROLL FOR NEXT