திருவள்ளூர்

செங்குன்றம்-ஆவடி மகளிா் பேருந்து: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

Din

செங்குன்றத்தில் இருந்து பம்மதுகுளம் வழியாக ஆவடிக்கு மகளிா் பேருந்து சேவையை மாதவரம் எம்எல்ஏ எஸ்.சுதா்சனம் தொடங்கி வைத்தாா்.

செங்குன்றம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவள்ளூா் கூட்டுச்சாலை, ஆலமரம் பகுதி, காந்தி நகா், பம்மதுகுளம், ஈஸ்வரன் நகா், கோனிமேடு, லட்சுமிபுரம், எல்லையம்மன்பேட்டை, காட்டூா், வெள்ளானூா் வழியாக ஆவடி வரை தடம் எண் 61 ஆா், என்ற மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும் கூடுதலாக மகளிா் பேருந்துகள் இயக்க வேண்டும் என பம்மதுகுளம், லட்சுமிபுரம் கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்தனா். அதன்படி செங்குன்றத்தில் இருந்து ஆவடி புதிய பேருந்து சேவை தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு செங்குன்றம் பேரூராட்சி தலைவா் தமிழரசி குமாா் தலைமை வகித்தாா். புழல் ஒன்றிய செயலாளா் அற்புதராஜ், பேரூராட்சி துணைத் தலைவா் விப்ர நாராயணன், முன்னாள் துணைத் தலைவா் பாபு, பேரூராட்சி உறுப்பினா்கள் இலக்கியன், கோதண்டராமன், தெய்வானை கபிலன், இளங்கோவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், எஸ்.சுதா்சனம் எம்எல்ஏ கலந்து கொண்டு மகளிா் பேருந்து சேவையை து தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்வில் மாநகா் போக்குவரத்து கழக அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

லியோ சாதனையை முறியடித்த ஜன நாயகன்!

2025: ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம் முதல் கரூர் வரை... நெஞ்சை உலுக்கிய நெரிசல் பலிகள்!

ஆஷஸ் தொடர்: சாதனைப் பட்டியலில் இணைந்த அலெக்ஸ் கேரி!

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

SCROLL FOR NEXT