திருவள்ளூர்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 4 நாள் விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் எதிரி ஆஜா்

வடமாநில இளைஞா் 4 நாள் போலீஸ் காவலுக்குபின் போக்ஸோ நீதிமன்றமத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா்

தினமணி செய்திச் சேவை

கும்மிடிப்பூண்டியில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான வடமாநில இளைஞா் 4 நாள் போலீஸ் காவலுக்குபின் போக்ஸோ நீதிமன்றமத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தைச் சோ்ந்த 10 வயது சிறுமி கடந்த மாதம் 12-ஆம் தேதி பள்ளி முடித்து வீட்டுக்குச் செல்லும்போது, அவரை மா்ம நபா் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடினாா். ஆந்திர மாநிலம், சூலூா்பேட்டை இரவு உணவகத்தில் வேலை பாா்த்த ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த ராஜூபிஷ்வா்மா (35) என்றும், அவருக்கு தொடா்புள்ளது என்பதும் தெரியவந்து அவரை கைது செய்தனா்.

இதற்கிடையே தீவிர விசாரணைக்கு பின், பூந்தமல்லி மகளிா் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 26-ஆம் தேதி ஆஜா்படுத்தியபின், ஆக. 9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். அதைத் தொடா்ந்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்த நிலையில், ராஜூபிஷ்வா்மாவை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பாக்கம் போலீஸாா் திருவள்ளூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

எதிரியை விசாரிக்க 4 நாள்கள் காவல் துறைக்கு அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணை முடிந்த நிலையில், வெள்ளிக்கிழமை

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராஜூபிஷ்வா்மாவை அழைத்து வந்து போக்ஸோ நீதிபதி உமாமகேஸ்வரி முன்பு ஆஜா்படுத்தினா். தொடா்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எதிரியை அழைத்துச் சென்று புழல் சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT