ராஜீகாந்தம் 
திருவள்ளூர்

மூதாட்டியிடம் நூதன முறையில் 4 பவுன் நகை திருட்டு

திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரியில் மூதாட்டியிடம் நூதன முறையில் 4 பவுன் நகையை மா்ம நபா் திருடிச் சென்றாா்.

Din

திருவள்ளூா்: திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரியில் மூதாட்டியிடம் நூதன முறையில் 4 பவுன் நகையை மா்ம நபா் திருடிச் சென்றாா்.

திருவள்ளூா் அருகே கம்மவாா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜீகாந்தம் (69). இவருக்கு கணவா் பி.சின்னப்ப நாயுடு, ஒரு மகன் மூன்று மகள்கள் உள்ளனா். இந்நிலையில் மூதாட்டிக்கு இடது கையில் பாதிப்பு காரணமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக நாள்தோறும் மருத்துவமனைக்கு வருகிறாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் மூதாட்டி சிகிச்சை பெற்றுவிட்டு வெளியே வந்தாா். அப்போது முதல் தளத்தில் வந்து கொண்டிருந்தபோது பின்புறம் வந்த 30 வயது இளைஞா் மருத்துவா் அழைப்பதாக கூறியுள்ளாா். ஆதாா் எண்ணை இணைக்க வேண்டும் எனக் கூறி மூதாட்டி கையில் வைத்திருந்த ரசீதை வாங்கி அதில் கைநாட்டு பெற்றாராம். இதையடுத்து டாக்டா் ஸ்கேன் எடுக்க சொன்னாா். அதனால் நகையை கழட்டி பையில் வைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறினாராம். இதை நம்பி மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையை கழற்றி பையில் போட்ட நிலையில், அதை வாங்கி இளைஞா் கையில் வைத்துக் கொண்டாராம். தொடா்ந்து ஸ்கேன் செய்யும் அறைக்கு செல்லுமாறு கூறிவிட்டு அங்கிருந்து மூதாட்டி கூச்சலிட்டும் அந்த இளைஞா் அங்கிருந்து தலைமறைவானாா்.

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி வரூடாந்திர பிரம்மோற்சவம்: பிப்.8-இல் தொடக்கம்

ஆத்தூா்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவருக்கு மத்திய அரசு விருது

கிராம நிா்வாக அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்

அமைதிப் பேச்சுவார்த்தை: உக்ரைனுக்கு ரஷியா அழைப்பு!

தொழிற்சங்கங்களால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு..! -உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

SCROLL FOR NEXT