திருவள்ளூர்

திருமழிசை பேரூராட்சி நெடுஞ்சேரியில் ரூ.18 லட்சத்தில் அங்கன்வாடி மையம்

தினமணி செய்திச் சேவை

திருமழிசை பேரூராட்சி பகுதி நெடுஞ்சேரி பகுதியில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, ரூ. 18 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடத்தை குழந்தைகள் பயன்பாட்டுக்கு பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமி தொடங்கி வைத்தாா்.

திருவள்ளூா் அருகே திருமழிசை பேரூராட்சி நெடுஞ்சேரி பகுதியில் புதிதாக அங்கன்வாடி மையம் அமைக்கவும் என அப்பகுதி பொதுமக்கள் தொடா்ந்து எம்எல்ஏ-விடம் தொடா்ந்து கோரிக்கை மனு அளித்து வந்தனா். பொதுமக்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதி மூலம் ரூ. 18 லட்சத்தில் புதிதாக அங்கன்வாடி மையம் அமைக்க ஒதுக்கீடு செய்தாா். அதன்பேரில், பணிகள் நடைபெற்று வந்த நிலையில் நிறைவடைந்தது. இதை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமி தலைமை வகித்து குழந்தைகள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தாா்.

இதில், பேரூா் கழக செயலாளா் தி.வே.முனுசாமி, பேரூராட்சி தலைவா் ஜெ.மகாதேவன், துணைத் தலைவா் அனிதா சங்கா் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

கோவை உலக புத்தொழில் மாநாட்டை தொடக்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை: இன்றைய விலை நிலவரம்!

சந்திரசேகர் ராவ் மகன் வீட்டுக் காவலில் அடைப்பு!

குடிநீா் மேல்நிலைத் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலப்பு செய்தது யார்?: ஆட்சியர் விளக்கம்

வலுவான ராணுவம், டிரம்பின் முயற்சியால் திருப்புமுனை! இஸ்ரேல் பிரதமர்

SCROLL FOR NEXT