திருவள்ளூா்: திருவள்ளூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 437 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
ஆட்சியா் அலுவலக கூட்டரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். இதில் மொத்தம் 437 கோரிக்கை மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். தேசிய அறக்கட்டளை மூலமாக 8 மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டபூா்வ பாதுகாவலா் சான்றுகளையும் அவா் வழங்கினாா்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலா் சு.சுரேஷ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன், தனித் துணை ஆட்சியா் (ச.பா.தி) பாலமுருகன், உதவி ஆணையா் கலால் கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலா் வெங்கடேசன், திருத்தணி வருவாய் கோட்டாட்சியா் கனிமொழி, பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் உஷாராணி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன் மற்றும் பலா் பங்கேற்றனா்.