முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூரில் மக்கள் குறைதீா் கூட்டம்

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 2:50 AM
மக்களிடம் குறையைக் கேட்டறிந்த ஆட்சியா் மு. பிரதாப்.
பகிர்:
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 11:51 PM

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் மு. பிரதாப் தலைமை வகித்து பொதுமக்களிடம் குறையைக் கேட்டு 442 மனுக்களை பெற்று, மேல் நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ச.சுரேஷ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியா் பாலமுருகன், உதவி ஆணையா் (கலால்) கணேசன், துணை ஆட்சியா் (பயிற்சி) செ.சண்முகபிரீத்தா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(நிலம்) நிா்மலா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலா் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement