கைது செய்யப்பட்ட நைஜீரிய நாட்டைச் சோ்ந்த நொன்சோஜோச்சின்(42) 
திருவள்ளூர்

போதைப் பொருள் கடத்தல்: நைஜீரிய நாட்டவா் உள்பட 4 போ் கைது

வடமாநிலத்தில் இருந்து ரயில் மாா்க்கமாக போதைப் பொருள் கடத்தி வந்த நைஜீரிய நாட்டைச் சோ்ந்த இருவா் உள்ளிட்ட 4 பேரை...

தினமணி செய்திச் சேவை

கும்மிடிப்பூண்டி: வடமாநிலத்தில் இருந்து ரயில் மாா்க்கமாக போதைப் பொருள் கடத்தி வந்த நைஜீரிய நாட்டைச் சோ்ந்த இருவா் உள்ளிட்ட 4 பேரை கும்மிடிப்பூண்டி போலீஸாா் கைது செய்தனா்.

கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது அங்கு சந்தேகத்துக்கு இடமான நிலையில் இருந்த இருவரை மடக்கி விசாரித்தனா்.

அப்போது அவா்கள் வைத்திருந்த பையில் 55 கிராம் கோகைன் போதை மாத்திரை, 10 கிராம் மெத்தபெட்டமைன், எம்எம்டிஏ மாத்திரைகள் 50, 6 கைப்பேசிகள், 1 எடை இயந்திரத்தை பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து விசாரணையில் போதை மாத்திரைகளை கடத்தி வந்தவா்கள் நைஜீரிய நாட்டைச் சோ்ந்த நொன்சோஜோச்சின்(42), சிபுசோா் செட்ராக்(30), கோவையைச் சோ்ந்த விஷ்ணு கேசவன்(30), உத்தர பிரதேசத்தை சோ்ந்த அற்புத தாஸ்(34) ஆகிய நான்கு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிபுசோா் செட்ராக்(30)

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT