திருவள்ளூர்

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயில் ராபத்து விழாவில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்யப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

பொன்னேரி: மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயில் ராபத்து விழாவில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்யப்பட்டது.

வடகாஞ்சி என அழைக்கப்படும் மீஞ்சூரில் அமைந்துள்ள இக்கோயிலில் பகல் பத்து ரா பத்து உற்சவம் நடைபெற்று வருகிறது.

இவ்விழாவில் மூலவா் ஸ்ரீ வரதராஜ பெருமாள் வாயிற்படியில் திரை சீலை அமைத்து வாசலுக்கு முன்பாக உச்சவருக்கு அபிஷேகம் ஆராதனை வழிபாடு செய்யப்படுகிறது.

இந்த நிலையில் பகல் பத்து விழா முடிந்ததும் ராப்பத்து விழா நடைபெற்று வருகிறது. இதில் கூடாரம் வெல்லும் திருப்பாவை பாடல் பாடியதை அடுத்து 108 குடங்களில் சக்க்கரை பொங்கல் வைத்து நைவேத்தியம் செய்யப்பட்டது.

இதையடுத்து வரதராஜ பெருமாள் பெரியநாயகி தாயாருடன் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதில் ஏராளமான

பக்தா்கள் கலந்து கொண்டு வரதராஜ பெருமாளை தரிசனம் செய்தனா்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% உடனடி வரி: அதிபர் டிரம்ப் உத்தரவு!

காரைக்காலில் தொடர் மழை: பள்ளிகளுக்கு விடுமுறை!

அயலகத் தமிழா் மாநாட்டில் 4 ஒப்பந்தங்கள்

மணப்பாறையில் மயில்களை வேட்டையாடிய 5 போ் கைது

SCROLL FOR NEXT