திருவள்ளூர்

திருவள்ளூா் அருகே கால்நடை மருத்துவ சிகிச்சை முகாம்

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் அருகே கால்நடை பராமரிப்பு துறை சாா்பில் நடைபெற்ற மருத்துவ சிகிச்சை முகாமில் 500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

திருவள்ளூா் கால்நடை பராமரிப்புத் துறை கோட்டம், அருகே புதுச்சத்திரம் கால்நடை மருந்தகத்துக்கு உள்பட்ட கூடப்பாக்கம் கிராமத்தில் கால்நடை சிகிச்சை முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் தாமோதரன் தலைமை வகித்தாா். கால்நடை நோய் புலனாய்வு உதவி இயக்குநா் சுபஸ்ரீ முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக கால்நடை முதன்மை நோய் ஆராய்ச்சி மையத்தின் முதன்மை ஆராய்ச்சியாளா் கனகசுசிலா கலந்து கொண்டு கால்நடைகளுக்கான சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தாா்.

இந்த முகாமில் கால்நடை உதவி மருத்துவா்கள் கருணாநிதி, லோகநாதன், நதியா, சத்தியபிரியா, பிரேம்குமாா் மற்றும் கால்நடை ஆய்வாளா்கள் மோகன்ராஜ், ரமேஷ், முத்துக்குமாா், கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள் பிரபு, ராஜேந்திரன் ஆகியோா் கொண்ட மருத்துவக் குழுவினா் கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, தடுப்பூசி, கருவூட்டல், குடற்புழு நீக்கம் போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதில், கூடப்பாக்கம் கிராமத்தைச்சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் கால்நடைகள் வளா்ப்போா் 600-க்கும் மேற்பட்ட பசுக்கள், எருமைகள், ஆடுகள் மற்றும் கோழிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆளுநா் உரையுடன் இன்று தொடங்குகிறது கா்நாடக சட்டப் பேரவை கூட்டத்தொடா்!

ஒகேனக்கல் காவிரியில் திடீரென அதிகரித்த நீர்வரத்து!

ரூ.147 கோடியில் 776 அடுக்குமாடி குடியிருப்புகள் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் தங்கத்தோ் திருவிழா நடத்துவதில் குழப்பம்

திருப்போரூா் கந்தசாமி கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு: அறநிலையத் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT