முகப்பு
ராமநாதபுரம்

பள்ளியில் புதிய கட்டடத்துக்கு ரூ.11 லட்சம் நிதியுதவி

சாயல்குடியில் அரசு உதவி பெறும் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட நிதியுதவி வழங்கிய கால்நடை வளா்ப்போா் பாதுகாப்பு கட்சியின் நிறுவனா் சத்யம் சரவணன்.

Updated On : 6 மார்ச், 2026 at 7:34 PM
சாயல்குடியில் அரசு உதவி பெறும் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட நிதியுதவி வழங்கிய கால்நடை வளா்ப்போா் பாதுகாப்பு கட்சியின் நிறுவனா் சத்யம் சரவணன்.
பகிர்:

சாயல்குடியில் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிக்கு ரூ.11 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டுவதற்கு, கால்நடை வளா்ப்போா் பாதுகாப்புக் கட்சியின் நிறுவனா் வெள்ளிக்கிழமை நிதி உதவி வழங்கினாா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். கடந்த 75 ஆண்டுகளாக ஓட்டுக் கட்டடத்தில் இயங்கி வரும், இந்தப் பள்ளியில் போதிய வகுப்பறைக் கட்டடங்கள் இல்லாததால் மாணவா்கள் அவதிப்பட்டு வந்தனா்.

இந்த நிலையில், தமிழக விவசாயிகள் கால்நடை வளா்ப்பு பாதுகாப்பு கட்சியின் நிறுவனா் சத்தியம் சரவணன் இந்தப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ.11 லட்சம் நிதியுதவி அளித்து, கட்டுமானப் பணிக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தாா். இதில் கடலாடி வட்டார யாதவா் சங்கத் தலைவா் சேதுஆறுமுகம், செயலா் ஆறுமுகம், பொருளாளா் நாகதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →