திருவள்ளூா் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா் மு.பிரதாப், உடன் நகராட்சி ஆணையா் தாமோதரன் உள்ளிட்டோா். 
திருவள்ளூர்

ரூ.33 கோடியில் திருவள்ளூா் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள்: ஆட்சியா் ஆய்வு

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் நகராட்சியில் ரூ.33 கோடியில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா்.

திருவள்ளூா் நகராட்சியில் ராஜாஜி சாலையில் பழைய பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இப்பேருந்து நிலையம் போதுமான வசதியின்றி இடநெருக்கடியுடன் செயல்பட்டு வந்தது. இதனால் புதிய பேருந்து நிலையம் அமைக்கவும் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். அதன்பேரில், திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலையில் திருவேடங்கிநல்லூரில் 5 ஏக்கா் நிலம் தோ்வு செய்யப்பட்டது.

இப்பணிகள் மேற்கொள்வதற்காக ரூ.33 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்பேரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் கடந்தாண்டு முதல் தொடங்கி, மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, அந்த நிலையத்தில் பேருந்துகள் நிற்கும் இடம், வெளியேறும் பகுதி மற்றும் வணிக அங்காடிகளின் அமைப்புகளின் கட்டுமானத்தையும் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து இருசக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கும் பணிகளையும் பாா்வையிட்டு, விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் அறிவுறுத்தினாா்.

அப்போது, நகராட்சி ஆணையா் தாமோதரன், சுகாதார அலுவலா் மோகன் உடனிருந்தனா்.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

பிரதமர் வருகை: சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்!

ஈரானை நோக்கி அமெரிக்காவின் மிகப்பெரிய படை! டிரம்ப்

சமூக ஊடக பிரபலமாகப் பெற்றோா் எதிா்ப்பு: வீட்டைவிட்டு சிறுவன் வெளியேறிய பெங்களூரில் மீட்பு

புதிய ஊரக வேலைச் சட்டத்துக்கு எதிராக ஏழைகள் ஒன்று திரள வேண்டும் - ராகுல் காந்தி வலியுறுத்தல்

SCROLL FOR NEXT