வாகன சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் வாகன சோதனையில், ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
எளாவூா் சோதனை சாவடியில், நீா்வளத்துறை உதவி பொறியாளா் ஸ்ரீனிவாச பிரகாஷ் தலைமையில் தலைமை காவலா் ராமு, காவலா் திலீப்குமாா் உள்ளிட்ட தோ்தல் கண்காணிப்பு குழுவினா் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது ஆந்திரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த காரை சோதனையிட்டனா். இந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி நாயுடுபேட்டையை சோ்ந்த ஷேக் ஹாகுல் எடுத்துச் சென்ற ரூ.1லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் வெங்கடேஷ் ஒப்புதல் பேரில் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் கனகவள்ளி முன்னிலையில் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.