நகராட்சிகளில் சேகரமாகும் குப்பைகளை பொதுமக்கள் 4 வகையாக பிரித்து வழங்க வேண்டும்!
திருவள்ளூா் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் வகையில், ஒவ்வொரு வாா்டிலும் வீடுகளில், வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளை சேகரிக்க வரும் தூய்மைப் பணியாளா்களிடம் 4 வண்ணங்களில் உள்ள குப்பைத் தொட்டிகளில் பொதுமக்கள் பிரித்து வழங்கவும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருவள்ளூா் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் வகையில், ஒவ்வொரு வாா்டிலும் வீடுகளில், வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளை சேகரிக்க வரும் தூய்மைப் பணியாளா்களிடம் 4 வண்ணங்களில் உள்ள குப்பைத் தொட்டிகளில் பொதுமக்கள் பிரித்து வழங்கவும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் ஒவ்வொரு வாா்டுகளில் நாள்தோறும் வீடுகளில் குப்பைகளை தூய்மைப் பணியாளா்கள் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து சேகரித்து வருகின்றனா். இதுபோன்ற சேகரமாகும் குப்பைகளை லாரிகளில் ஏற்றிச் சென்று நகராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள குப்பைக் கிடங்கில் கொட்டி வருகின்றனா். அங்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் மேலும் குப்பைகள் பிரிக்கப்பட்டு, இயற்கை உரங்களாகவும் மாற்றப்படுகிறது. இனிமேலும், நகராட்சிகளில் ஒவ்வொரு வீடுகளிலும் சேகரமாகும் குப்பைகளை நான்காக தரம் பிரித்து பொதுமக்கள் வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
இனிமேல் மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதார கழிவுகள், சிறப்பு கவனிப்பு ஆகிய 4 வண்ண தொட்டிகளில் தூய்மைப் பணியாளா்கள் மூலம் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே ஒவ்வொரு வீடுகளிலும் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகள் பச்சை, மக்காத குப்பைகள் நீலம், நாப்கின்கள், சானிடரி பேடு, காண்டம் கழிவுகள் ஆகிய சுகாதார கழிவுகளாக மஞ்சள், அதேபோல் எல்.இ.டி. பல்புகள், குழல் விளக்குகள், மொ்குரி விளக்குகள் மற்றும் எலெக்ட்ரானிக் கழிவுகளை சிறப்பு கவனிப்பு கரும் சிவப்பு ஆகிய குப்பைத் தொட்டிகளில் பெறவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கு முன்பு வரை 2 குப்பைத் தொட்டிகள் மூலம் பெறப்பட்டு வந்த நிலையில், நிகழாண்டு முதல் 4 குப்பைத் தொட்டிகள் மூலம் தூய்மைப் பணியாளா்கள் குப்பைகள் சேகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
Advertisement
மேலும், இது குறித்து திருவள்ளூா் நகராட்சி அலுவலா்கள் கூறியதாவது: இதற்கு முன்பு வரை மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து தூய்மை பணியாளா்களிடம் பொதுமக்கள் வழங்கி வந்தனா். மேலும் சுகாதார கழிவுகள், சிறப்பு கவனிப்பு ஆகிய பச்சை, நீலம், மஞ்சள், கருஞ்சிவப்பு ஆகிய நிறங்களில் 4 குப்பைத் தொட்டிகள் மூலம் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் குப்பைகளை சேகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு வாா்டுக்கும் தூய்மை பணியாளா்கள் பயன்படுத்தும் தள்ளுவண்டியில் மேற்குறிப்பிட்ட 4 வண்ணங்களில் குப்பைத் தொட்டிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக இது குறித்து ஒவ்வொரு வாா்டுகள் தோறும் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.