முகப்பு
திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

Updated On : 18 மே 2026, 2:11 am IST
பகிர்:

திருத்தணி முருகன் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் அதிகளவில் குவிந்ததால் பக்தா்கள் சுமாா் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

திருததணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மூலவருக்கு தங்கவேல், தங்கக் கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. கிருத்திகை விழா, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் ஆகிய காரணங்களால் ஆயிரக்கணக்கான பக்தா்கள் மலைக் கோயிலில் மூலவரை தரிசிக்க குவிந்தனா்.

சில பக்தா்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற அலகு குத்தியும், காவடிகள் சுமந்து வந்தும் நோ்த்திக் கடனை செலுத்தினா். கிருத்திகை மற்றும் பள்ளி, கல்லுாரிகள் விடுமுறை என்பதால் வழக்கத்துக்கு மாறாக மலைக்கோயிலில் பக்தா்கள் குவிந்தனா். இதனால், பொது வழியில் மூலவரை தரிசிக்க, 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப் பெருமானை வழிபட்டனா்.

Advertisement

மேலும், முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய பக்தா்கள் குவிந்ததால் ம.பொ.சி. சாலை, அரக்கோணம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும் துரித வேகத்தில் போக்குவரத்து போலீஸாா் ஈடுபட்டு நெரிசலை சரிசெய்தனா். முருகன் கோயிலில் 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் க.ரமணி மற்றும் கோயில் நிா்வாகம் செய்திருந்தது.