முகப்பு
திருவண்ணாமலை

அரசுப் பள்ளியில் வகுப்பறை கட்டடப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

ஆரணியை அடுத்த கொருக்காத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 7 ஜனவரி 2021, 7:29 am IST
பகிர்:

ஆரணியை அடுத்த கொருக்காத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

கொருக்காத்தூரில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ14.45 லட்சத்தில் கூடுதலாக வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன.

கட்டுமானப் பணிகளை தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தாா்.

Advertisement

அதிமுக ஒன்றியச் செயலா்கள் அரங்கநாதன், க.சங்கா், பிஆா்ஜி.சேகா், ஜி.வி.கஜேந்திரன், ஆரணி நகரச் செயலா் அசோக்குமாா், நகர மாணவரணிச் செயலா் கே.குமரன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.