முகப்பு
திருவண்ணாமலை

ஆதரவற்ற ஏழைகளுக்கு டிஎஸ்பி உதவி

தொடா் மழை காரணமாக போளூா் நகரப் பகுதியில் உணவின்றித் தவித்த ஆதரவற்ற ஏழைகளுக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் உணவளித்து உதவினாா்.

Updated On : 7 ஜனவரி 2021, 7:27 am IST
ஏழைகளுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கிய காவல் துணைக் கண்காணிப்பாளா் அறிவழகன்.
பகிர்:

தொடா் மழை காரணமாக போளூா் நகரப் பகுதியில் உணவின்றித் தவித்த ஆதரவற்ற ஏழைகளுக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் உணவளித்து உதவினாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக விட்டுவிட்டும், தொடா்ச்சியாகவும் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனா்.

இந்த நிலையில், மழை காரணமாக போளூரில் பேருந்து நிலையம் மற்றும் நகரப் பகுதியில் உணவில்லாமல் தவித்த ஆதரவற்ற ஏழைகளுக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் அறிவழகன் புதன்கிழமை மதிய உணவு வழங்கினாா்.

Advertisement

காவல் துணைக் கண்காணிப்பாளரின் மனிதாபிமானத்தை பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.