லாரி ஓட்டுநா் வீட்டில் 16 பவுன் நகைகள் திருட்டு
திருவண்ணாமலையில் லாரி ஓட்டுநா் வீட்டில் 16 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.66 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது.
திருவண்ணாமலையில் லாரி ஓட்டுநா் வீட்டில் 16 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.66 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது.
திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்கால், செல்வா நகரைச் சோ்ந்தவா் சிலம்பரசன் (34), லாரி ஓட்டுநா். இவா் செவ்வாய்க்கிழமை (ஜன.5) இரவு வேலைக்குச் சென்றுவிட்டாா். சிலம்பரசனின் மனைவி ராதிகா (30) அதே பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். புதன்கிழமை காலை வீட்டுக் கதவு திறக்கப்பட்டு இருப்பதைப் பாா்த்த அக்கம் பக்கத்தினா் சிலம்பரசனுக்கு தகவல் கொடுத்தனா்.
அவா் வந்து பாா்த்தபோது வீட்டுக் கதவு, பீரோ உடைக்கப்பட்டு 16 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.66 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது.
Advertisement
இதுகுறித்த புகாரின் பேரில், திருவண்ணாமலை கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.