முகப்பு
வணிகம்

எஃப் சீரிஸ் வகை ஸ்மார்ட்ஃபோன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஓப்போ

சீனாவைச் சேர்ந்த ஓப்போ, இந்தியாவில் அதன் புதிய எஃப் சீரிஸ் வகை ஸ்மார்ட்ஃபோன்களை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக திங்கள்கிழமை தெரிவித்தது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:44 PM
பகிர்:

சீனாவைச் சேர்ந்த ஓப்போ, இந்தியாவில் அதன் புதிய எஃப் சீரிஸ் வகை ஸ்மார்ட்ஃபோன்களை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக திங்கள்கிழமை தெரிவித்தது.

இதில், புதிய வடிவம் மற்றும் தொழில்நுட்பத்துடன் இளைஞர்களுக்கு தேவையான அத்தனை அம்சங்களும் இடம்பெறக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டு பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

முன்னதாக, ரெனோ 3 மற்றும் ரெனோ 3 ப்ரோ வகைகளை 5ஜி தொழில்நுட்ப வசதியுடன் வடிவமைத்து கடந்த வாரம் அறிமுகம் செய்தது ஓப்போ. இவை 6.5 இன்ச், ஓஎல்ஈடி வகை தொடுதிரையுடன், குவால்கோம் ஸ்னாப்டிராகன் 765ஜி சிப்ஸெட் வசதியை கொண்டுள்ளது. 

கேமிங் வகைகளுக்கு சிறந்து விளங்கும் வகையில் இவ்வகை ஸ்மார்ட்ஃபோன்களை வடிவமைத்துள்ளது ஓப்போ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.