வணிகம்

வட்டி விகித குறைப்பு எதிர்பார்ப்பால் சென்செக்ஸ் 280 புள்ளிகள் அதிகரிப்பு

ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பால் பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 280 புள்ளிகள் அதிகரித்தது.

DIN


ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பால் பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 280 புள்ளிகள் அதிகரித்தது.
தொழில்துறை உற்பத்தி குறைந்துள்ள நிலையில், நாட்டின் சில்லறைப் பணவீக்கமானது கட்டுப்பாட்டு அளவுக்குள் இருப்பதை மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் வெளிக்காட்டியது. இதனால், வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதத்தில்  ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதங்களை மீண்டும் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடையே அதிகரித்தது. அதன் காரணமாக, பங்கு வர்த்தகம் விறுவிறுப்படைந்தது.
அந்நிய முதலீட்டு வரத்து அதிகரித்து ரூபாய் மதிப்பு வலுப்பெற்றது, அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போர் பதற்றம் குறைந்து வருவதற்கான சூழல்கள்  தென்பட்டுள்ளது போன்றவையும் பங்குச் சந்தையின் ஏற்றத்துக்கு கூடுதல் வலு சேர்த்தன.
மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 280 புள்ளிகள் அதிகரித்து 37,384 புள்ளிகளாக நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 93 புள்ளிகள் உயர்ந்து 11,075 புள்ளிகளாக நிலைபெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT