உயர்வுடன் நிறைவடைந்த வணிகம்: உச்சத்தில் சென்செக்ஸ்
பங்குச்சந்தையின் இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் முடிவடைந்துள்ளன. சென்செக்ஸ் 46 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
பங்குச்சந்தையின் இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் முடிவடைந்துள்ளன. சென்செக்ஸ் 46 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
இந்த வாரத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்வுடன் தொடங்கி உயர்வுடன் முடிவடைந்து வரும் பங்குச்சந்தை வர்த்தகம் இன்றும் உயர்வுடன் முடிவடைந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 494.99 புள்ளிகள் உயர்ந்து 46,103.5 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுபெற்றுள்ளது. மொத்த வர்த்தகத்தில் இது 1.09 சதவிகிதம் உயர்வாகும்.
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 136.15 புள்ளிகள் உயர்ந்து 13,529.10 புள்ளிகளாக வர்த்தகம் முடிவடைந்துள்ளது. மொத்த வர்த்தகத்தில் இது 1.02 சதவிகிதம் உயர்வாகும்.
பங்குச்சந்தையில் அதிகபட்சமாக ஏஸியன் பெயின்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு ஏற்றம் கண்டுள்ளன. ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்தில் 3.37 சதவிகித பங்குகள் உயர்ந்துள்ளன.
அதற்கு அடுத்தபடியாக கோட்டாக் வங்கி 2.67 சதவிகிதமும், ஆக்சிஸ் வங்கி 2.19 சதவிகிதமும், எச்.டி.எஃப்.சி. வங்கிகளின் பங்குகள் 2.15 சதவிகிதம் உயர்ந்துள்ளன.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 20 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றமடைந்துள்ளன.
டாடா ஸ்டீல், மாருதி சுசூகி, பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.