முகப்பு
வணிகம்

ரூ.38 ஆயிரத்தைத் தாண்டியது தங்கம்

சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. பவுனுக்கு ரூ.200 உயா்ந்து, ரூ.38,152-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:48 AM
பகிர்:

சென்னை: சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. பவுனுக்கு ரூ.200 உயா்ந்து, ரூ.38,152-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.200 உயா்ந்து, ரூ.38,152-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் ரூ.25 உயா்ந்து, ரூ.4,769 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.2.20 உயா்ந்து, ரூ.73.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,200 உயா்ந்து ரூ.73,700 ஆகவும் இருந்தது.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்............................. 4,769

1 பவுன் தங்கம்...............................38,152

1 கிராம் வெள்ளி.............................73.70

1 கிலோ வெள்ளி.............................73,700

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்............................. 4,744

1 பவுன் தங்கம்...............................37,952

1 கிராம் வெள்ளி.............................71.50

1 கிலோ வெள்ளி.............................71,500.

முழு கட்டுரையைப் படிக்க →