முகப்பு
வணிகம்

சரிவிலிருந்து மீண்ட வீடு-மனை வர்த்தகம்

முந்தைய 3 மாதங்களில் சரிவைக் கண்டிருந்த வீட்டு-மனை விற்பனை, அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான காலாண்டில் மீண்டும் உயா்ந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:


புது தில்லி: முந்தைய 3 மாதங்களில் சரிவைக் கண்டிருந்த வீட்டு-மனை விற்பனை, அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான காலாண்டில் மீண்டும் உயா்ந்துள்ளது.

இதுகுறித்து வீடு-மனை துறையினா் மற்றும் ஆலோசா்கள் கூறியதாவது:

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான கால அளவோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் அந்த மாதங்களில் வீடு மனை விற்பனை சரிவைச் சந்தித்திருந்தது.

ஆனால், நடப்பாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான கால அளவில் அந்த விற்பனை முந்தைய ஆண்டின் அதே மாதங்களோடு ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது.

தற்போது குறைக்கப்பட்டுள்ள வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள், அதிகரிக்காத வீடு மனை விலைகள், தள்ளுபடிகள், கவா்ச்சிகரமான கட்டணத் திட்டங்கள், சில மாநிலங்களில் குறைக்கப்பட்ட முத்திரை வரி, கரோனா நெருக்கடிக்கிடையே சொந்த வீடு வைத்திருக்க வேண்டியன் அவசியம் அதிகரித்தது போன்ற காரணங்களால் வீட்டு மனைகளின் விற்பனை அதிகரித்துள்ளது.

இந்தப் போக்கு அடுத்த ஆண்டும் நீடிக்கும்.

டிசம்பருடன் முடிவடையும் காலாண்டில், நாட்டின் 7 பெரிய நகரங்களில் 50,900 வீட்டு-மனைகள் விற்பனையாகின. கடந்த ஆண்டின் இதே கால அளவில் விற்பனையான 29,520 வீட்டு-மனைகளோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை அதிகமாகும்.

எனினும், ஒட்டுமொத்தமாக 2019-ஆம் ஆண்டு விற்பனையோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் விற்பனை 47 சதவீதம் சரிந்துள்ளது என துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

முழு கட்டுரையைப் படிக்க →