வணிகம்

குறைவான எடையுடன் நீண்ட காலம் இயங்கக்கூடிய செயற்கைக் கால்கள்!

DIN

கிங் ஜார்ஜின் மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நீண்ட காலம் இயங்கக்கூடிய எடை குறைந்த செயற்கைக் கால்களை உருவாக்கியுள்ளனர்.

உடல் மருத்துவம் மற்றும் கால்களில் மறுவாழ்வுத் துறையில் நவீன தொழில் நுட்பத்தில் குறைந்த எடையுடன், நீண்ட காலம் இயங்கக்கூடிய செயற்கைக் கால்களை பாலிப்ரொப்பிலீன் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். 

'செயற்கைக் கால்களை தயாரிக்க, படிப்படியாக தெர்மோசெட்டிங் பிளாஸ்டிக்கிலிருந்து பாலிப்ரொப்பிலீன் பிளாஸ்டிக்கிற்கு மாறியுள்ளோம். பாலிப்ரொப்பிலீன் பிளாஸ்டிக் பயன்படுத்தி தயாரிக்கப்படும் செயற்கைக் கால்கள் இலகுவாக உள்ளன. மேலும், இவை நீண்ட காலம் இயங்கக்கூடியவை. இதனால் நோயாளிகளுக்கு உடல் ரீதியாக நன்மை கிடைக்கும். 

தெர்மோசெட்டிங் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி செய்யப்படும் சாதனங்கள் பெரும்பாலாக ஒரு வருடத்திற்கு மேலாக நீடிப்பதில்லை. எனவே தான் இதற்கு மாற்றாக புதிதாக பாலிப்ரொப்பிலீன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கால்களுக்கு மட்டுமின்றி கைகளுக்கும் பாலிப்ரொப்பிலீன் பிளாஸ்டிக்கை  பயன்படுத்தி செயற்கை சாதனங்களை உருவாகும் பணியில் ஈடுபட்டுள்ளோம்' ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT