2021 - இரண்டாம் காலாண்டில் 1.28 கோடி ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்த 'நோக்கியா' 
வணிகம்

2021 - இரண்டாம் காலாண்டில் 1.28 கோடி ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்த 'நோக்கியா'

ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் தனக்கென தனி வாடிக்கையாளர்களை தக்கவைத்திருக்கும் 'நோக்கியா' நிறுவனம் இரண்டாவது காலாண்டில் 1.28கோடி ஸ்மார்ட்போன்களை   சந்தைப்படுத்தி சாதனை படைத்திருக்கிறது.

DIN

ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் தனக்கென தனி வாடிக்கையாளர்களை தக்கவைத்திருக்கும் 'நோக்கியா' நிறுவனம் 2021-இரண்டாவது காலாண்டில் 1.28கோடி ஸ்மார்ட்போன்களை  சந்தைப்படுத்தி சாதனை படைத்திருக்கிறது.

சமீபத்தில் கவுண்டர் பாயிண்ட் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட தகவலில் 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சந்தைப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை விட 36 சதவீதம் கூடுதலாக இரண்டாம் காலாண்டில் விற்பனை செய்திருக்கிறது நோக்கியா நிறுவனம் .

அதன் முக்கிய ஆக்கங்களான நோக்கியா 1.4 , 'ஜி' மற்றும் 'சி' தொடர் ஸ்மார்ட்போன்களால் தான் இது சாத்தியம் எனவும் தெரிவித்திருக்கிறார்கள். இதன் மூலம்  ஸ்மார்ட்போன்களை சந்தைப்படுத்தியதில் உலகளவில் இராண்டாம் இடம் பெற்றதோடு மேலும் செல்போன் சந்தை மதிப்பில் 18 சதவீத பங்குகளையும் தக்கவைத்திருக்கிறது நோக்கியா .

ஒட்டுமொத்தமாக அனைத்து நிறுவனங்களும் சேர்ந்து கடந்த காலாண்டில் சந்தைப்படுத்தப்படுத்தபட்ட ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை இந்த காலாண்டில் 7 சதவீதம் குறைந்திருக்கிறது. இதற்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவில் போடப்பட்ட கரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கும் காரணம் என கூறப்பட்டாலும் இதுவரை 30.29 கோடி ஸ்மார்ட்போன்கள் சந்தைப்படுத்தப்பட்டிருக்கிறது.

இருப்பினும் கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இருந்ததை விட தற்போது கரோனாவால் பொருளாதாரம் மேம்பட்டு வருவதால் இந்தக் காலாண்டில்  ஏற்றுமதி 19 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

1,751 கிலோ தடைசெய்யப்பட்ட பட்டாசுகள் பறிமுதல்: 7 போ் கைது

வாக்கு திருட்டு வெற்றிபெற அனுமதிக்க மாட்டோம்: தேவேந்தா் யாதவ் உறுதி

நூதன மோசடி: நூஹ் பகுதியைச் சோ்ந்த ஒருவா் கைது

போதைப்பொருள் வழக்கில் தென்னாப்பிரிக்க நாட்டவருக்கு தில்லி உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது

மழைவெள்ள நீரில் மூழ்கி இறந்தவரின் குடும்பத்தினரை சந்தித்த ஆம் ஆத்மி குழு!

SCROLL FOR NEXT