உயர்கிறது ஏடிஎம் சேவைக் கட்டணம்! 
வணிகம்

உயர்கிறது ஏடிஎம் சேவைக் கட்டணம்!

அனைத்து வங்கிகளும் ஏடிஎம் சேவைக் கட்டணத்தை உயர்த்த இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் , அடுத்தாண்டு ஜனவரி முதல் ஏடிஎம் சேவைக் கட்டணம் உயர இருக்கிறது.

DIN

அனைத்து வங்கிகளும் ஏடிஎம் சேவைக் கட்டணத்தை உயர்த்த இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் , அடுத்தாண்டு ஜனவரி முதல் ஏடிஎம் சேவைக் கட்டணம் உயர இருக்கிறது.

தற்போது வரை வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை அதே வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் மாதத்திற்கு 5 முறை வரை இலவசமாகவும் அதற்கு அதிகமாக பயன்படுத்தினால் சேவைக் கட்டணமாக ரூ.20-யை தொடர்புடைய வங்கிகள் எடுத்துக் கொள்ளும். 

வேறு வங்கியின் ஏடிஎம்களில் மாநகராட்சிப் பகுதியில் 3 முறையும் மாநகராட்சி அல்லாத பகுதிகளில் 5 முறையும் இலவசமாக பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.அதை மீறினால் ரூ.23.6 சேவைக் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. 

இனி அடுத்தாண்டில் இருந்து இந்த கட்டணங்கள் உயர இருக்கிறது. அதன் படி, ஜிஎஸ்டியுடன் சேர்த்து வங்கிக் கணக்கு உள்ள வங்கி ஏடிஎம்-களில் இலவச பரிவர்த்தனையை மீறினால் ரூ.21 ஆகவும் , வேறு வங்கி ஏடிஎம்களில் 25 ரூபாய் சேவைக் கட்டணமாகப் பிடித்தம் செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

முன்னதாக,  ஹெச்.டிஎஃப்.சி மற்றும் ஆக்ஸிஸ் வங்கிகள் கட்டணத்தை அதிகரித்துள்ள நிலையில் ஜனவரி 1ல் இருந்து மற்ற வங்கிகளும் உயர்த்த இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

SCROLL FOR NEXT