சென்செக்ஸ் புதிய உச்சம்: 51 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து சாதனை
பங்குச்சந்தை வணிகத்தில் சென்செக்ஸ் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சென்செக்ஸ் 51 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது.
பங்குச்சந்தை வணிகத்தில் சென்செக்ஸ் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சென்செக்ஸ் 51 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 409 புள்ளிகள் உயர்ந்து 51,023 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 88 புள்ளிகள் உயர்ந்து 14,984.25 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.
பங்குச்சந்தை வணிகம் இன்று (பிப்.5) காலை உயர்வுடன் தொடங்கிய நிலையில், வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே 51 ஆயிரம் புள்ளிகளைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.