பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிவு: சென்செக்ஸ் 228 புள்ளிகள் உயர்வு
வாரத்தின் முதல் நாளான இன்று (ஜூன்7) பங்குச்சந்தை வணிகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 228 புள்ளிகள் உயர்ந்தது.
வாரத்தின் முதல் நாளான இன்று (ஜூன்7) பங்குச்சந்தை வணிகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 228 புள்ளிகள் உயர்ந்தது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 228.46 புள்ளிகள் உயர்ந்து 52,328.51 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுபெற்றது. இது மொத்த வர்த்தகத்தில் இது 0.44 சதவிகிதம் உயர்வாகும்.
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 81.40 புள்ளிகள் உயர்ந்து 15,751.65 புள்ளிகளாக வர்த்தகம் முடிவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.52 சதவிகிதம் உயர்வாகும்.
சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில் 22 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டன. அவற்றில் அதிகபட்சமாக பவர் கிரிட் நிறுவனம் 4.44 சதவிகிதமும், என்டிபிசி 4.07 சதவிகிதமும், அல்ட்ராடெக் சிமெண்ட் 2.78 சதவிகிதமும் ரிலையன்ஸ் பங்குகள் 1.68 சதவிகிதமும் உயர்வுடன் காணப்பட்டன.