முகப்பு
வணிகம்

பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் தொடக்கம்

வாரத்தின் இரண்டாவது நாளான இன்று (மார்ச் 30) பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 385 புள்ளிகள் வரை உயர்ந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:53 PM
கோப்புப்படம்
பகிர்:

வாரத்தின் இரண்டாவது நாளான இன்று (மார்ச் 30) பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 385 புள்ளிகள் வரை உயர்ந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 385 புள்ளிகள் உயர்ந்து 49,800.95 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. இது மொத்த வர்த்தகத்தில் இது 1.62 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 131 புள்ளிகள் உய்ர்ந்து 14,638 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 1.68 சதவிகிதம் உயர்வாகும்.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல்தர பங்குகளில், 28 நிறுவனங்களின் பங்குகள் நேர்மறையாக இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கின.

அதிகபட்சமாக என்.டி.பி.சி. 3.89 சதவிகிதமும், ஓ.என்.ஜி.சி. 3.42 சதவிகிதமும், டைட்டன் கம்பெனி 3.17 சதவிகிதமும், எச்.டி.எஃப்.சி. 2.51 சதவிகிதமும் உயர்ந்துள்ளன.

மாருது சுசூகி மற்றும் எம் & எம் நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே சென்செக்ஸ் பட்டியலில் சரிந்து காணப்படுகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →