ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 5 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 13.77 லட்சம் டன் கச்சா உருக்குப் பொருள்களை உற்பத்தி செய்துள்ளது. இது, கடந்த 2020-ஆம் ஆண்டின் இதே ஆகஸ்ட் மாத உற்பத்தியான 13.17 லட்சம் டன்னுடன் ஒப்பிடுகையில் 5 சதவீதம் அதிகமாகும்.
நடப்பாண்டு ஆகஸ்டில் நிறுவனத்தின் உருக்கு தகடுகளின் உற்பத்தியானது 9.80 லட்சம் டன்னிலிருந்து 8.99 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இது, 8 சதவீதம் குறைவாகும்.
அதேசமயம், நிறுவனத்தின் உருக்கு கம்பிகள் உற்பத்தி கணக்கீட்டு மாதத்தில் 2.32 லட்சம் டன்னிலிருந்து 30 சதவீதம் அதிகரித்து 3.01 லட்சம் டன்னை எட்டியது.
ஆகஸ்ட் மாதத்தில் சராசரி பயன்பாட்டு திறன் 92 சதவீதமாக இருந்தது என ஜேஎஸ்டபிள்யூ தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.