முகப்பு
கோப்புப்படம்
வணிகம்

நஷ்டத்தில் ஃபோர்டு நிறுவனம்? இந்தியாவில் கார் உற்பத்தி ஆலைகள் மூடல்

ஃபோர்டு நிறுவனம் நஷ்டத்தில் இருப்பதால் இந்தியாவில் கார் உற்பத்தி ஆலைகளை மூட அந்நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வணிகம்

நஷ்டத்தில் ஃபோர்டு நிறுவனம்? இந்தியாவில் கார் உற்பத்தி ஆலைகள் மூடல்

ஃபோர்டு நிறுவனம் நஷ்டத்தில் இருப்பதால் இந்தியாவில் கார் உற்பத்தி ஆலைகளை மூட அந்நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:06 AM
கோப்புப்படம்
பகிர்:

இந்தியாவில் ஃபோர்டு மோட்டார் நிறுவனங்களை மூட அந்நிறுவனம் முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபோர்டு நிறுவனம் நஷ்டத்தில் இயங்கிருவதாகவும் எனவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த முடிவை அமல்படுத்துவதற்கு ஓராண்டு காலமாகும் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இருப்பினும், இந்தியாவில் இறக்குமதியின் மூலம் கார்கள் விற்பனை செய்யப்படும் என செய்தி வெளியாகியுள்ளது. அந்தவகையில், காரை ஏற்கனவே வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவை அளிக்கப்படவுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவலை ஃபோர்டு நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. 

ஜெனரல் மோட்டாரஸ், ஹார்லி டேவிட்சன் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் கார் உற்பத்தி ஆலைகளை மூடவுள்ளது. இதுகுறித்த செய்தியை எகனாமிக் டைம்ஸ் முதல்முறையாக வியாழக்கிழமை வெளியிட்டிருந்தது.
 

முழு கட்டுரையைப் படிக்க →