முகப்பு
வணிகம்

பங்குச்சந்தையில் அசத்தல்: ரூ.3 லட்சம் கோடி மதிப்புடன் அதானி எண்டர்பிரைசஸ்!

அதானி குழுமத்தின் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் ரூ.3 லட்சம் கோடி மதிப்பைப் பெற்றுள்ளது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:56 AM
கௌதம் அதானி
பகிர்:

அதானி குழுமத்தின் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் ரூ.3 லட்சம் கோடி மதிப்பைப் பெற்றுள்ளது.

அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழிலதிபர். உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் 4-வது இடத்தில் இருப்பவர்.

இந்நிலையில், அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் இந்தியப் பங்குச்சந்தையில் ரூ.3 லட்சம் கோடி மதிப்பை அடைந்துள்ளது. இதன் மூலம் இந்த இலக்கை எட்டிய 4-வது பெரிய நிறுவனம் என்கிற சாதனையையும் அடைந்துள்ளது.

மேலும், கடந்த 6 மாதங்களில் அந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 53 சதவீதம் அதிகரித்து தற்போது,  ரூ.2,673 ஆக உயர்ந்துள்ளது.

அதானி  5ஜி ஏலத்தில் ஏலத்தில் பங்கேற்றுள்ள நிலையில், அதானி பங்குகளின் விலைகள் அதிகரிக்க துவங்கியுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →