உலகளவில் முதலிடம்: ஆப்பிள் சந்தை மதிப்பு 3 லட்சம் கோடி டாலர்கள்! 
வணிகம்

உலகளவில் முதலிடம்: ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3 லட்சம் கோடி டாலர்கள்!

மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் தனக்கென தனி முத்திரையுடன் இயங்கிக்கொண்டிருக்கும் ஆப்பிள் நிறுவனம்

DIN

மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் தனக்கென தனி முத்திரையுடன் இயங்கிக்கொண்டிருக்கும் ஆப்பிள் நிறுவனம் பங்குச் சந்தையில் 3 லட்சம் கோடி டாலர் மதிப்பைப் பெற்று புதிய சாதனையைப் படைந்திருக்கிறது.

புத்தாண்டு துவக்கத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 182.01 டாலரிலிருந்து 182.88 டாலராக  உயர்ந்து வர்த்தகமானதால் அதன் சந்தை மதிப்பு 2.99 லட்சம் கோடி டாரலாக அதிகரித்துள்ளது. இதனால், உலகளவில் அதிகப்படியான சந்தை மதிப்பைக் கொண்டுள்ள முதல் நிறுவனமாக ஆப்பிள் மாறியிருக்கிறது.

ஆப்பிளின் தயாரிப்புகளான ஐபோன், மேக்-புக், ஆப்பிள் டிவி ஆகியவை பல புதிய வாடிக்கையாளர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது.

மேலும், 2 லட்சம் கோடி டாலர் மதிப்புடன் மைக்ரோசாஃப்ட் இரண்டாம் இடத்திலும், அமெசான், டெஸ்லா,ஆல்பாபெட் நிறுவனங்கள் 1 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்புடன் அடுத்தடுத்த இடங்களிள் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாடகர் ஸுபீன் கர்க் மரணம்: மேலாளர், விழா ஏற்பாட்டாளர் மீது கொலை வழக்கு!

அச்சுறுத்தலில் இந்திய ஜனநாயகம்! - கொலம்பியாவில் பிரதமர் மோடியை தாக்கிப் பேசிய ராகுல்!

மகளிர் உலகக் கோப்பை: 129 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான்!

காந்தி சிலைக்கு காவித்துண்டு: புதிய சர்ச்சை!

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நிறைவு: ஆந்திர முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து!

SCROLL FOR NEXT